உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இளநீர் விலையில் மாற்றமில்லை

 இளநீர் விலையில் மாற்றமில்லை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலையை ஒப்பிடுகையில், 23 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, 23 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 10,000 ரூபாய். அனைத்து பகுதிகளிலும் பனிப்பொழிவுடன் கூடிய குளிரான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. 2026ல், இளநீர் வரத்து கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. அதேநேரம், இளநீர் விலை உயரும். உரிய பராமரிப்பு முறைகளை கையாண்டு ஈரியோபைட் சிலந்திப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தி இளநீர் தரத்தை உயர்த்தி, நல்ல விலையை விவசாயிகள் பெற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை