உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திறந்தவெளியில் கழிவு குவிப்பு; நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

திறந்தவெளியில் கழிவு குவிப்பு; நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

வால்பாறை : வால்பாறையில், திறந்தவெளியில் கழிவு கொட்டினால் அபராதம் விதிக்கப்படும், என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வால்பாறை நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரித்து, இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. நகரை சுகாதாரமாக மாற்ற, நகராட்சி சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்படுகின்றன.நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் கூறியதாவது: துாய்மை இந்தியா திட்டம் துவங்கி, 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், திட்டம் குறித்து வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.வால்பாறை நகரில், பொதுமக்கள் சிலர் குப்பையை திறந்தவெளியில் வீசி செல்கின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் ஆற்றோரப்பகுதியில் வீடு கட்டி வசிக்கும் மக்கள், குப்பையை ஆற்றில் வீசுகின்றனர்.துாய்மை பணியாளர்கள் வீடு தேடி வந்து குப்பையை தரம் பிரித்து வாங்கி செல்லும் நிலையில், திறந்தவெளியில் குப்பையை வீசுவதை மக்களும் தவிர்க்க வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை