உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தொழில்நுட்ப ஆராய்ச்சி மையங்கள் திறப்பு

 தொழில்நுட்ப ஆராய்ச்சி மையங்கள் திறப்பு

கோவை: துடியலுார், வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில், ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன் துறையில் புதிய ஆராய்ச்சி மையங்கள் திறக்கப்பட்டது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். பெருநிறுவன சமூகப் பொறுப்பு துறையின் கீழ் ஹிரோடெக் நிறுவன உறுதுணையுடன் ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், மேக்ஸ் பைட் நிறுவனத்தின் உறுதுணையுடன் இண்டஸ்ட்ரி 4.0 அண்ட் ட்ரான்ஸ்பர்மேஷன் ஆராய்ச்சி மையம் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ளது. கல்லுாரி மற்றும் ஹிரோடெக் இந்தியா, மேக்ஸ்பைட் டெக்னாலஜிஸ் சர்வீசஸ் நிறுவனங்களுக்கும் தொழில்நுட்ப ஆராய்ச்சி தொடர்பான முயற்சிகளில் ஒத்துழைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கல்லுாரியின் முதல்வர் சவுந்தர்ராஜன் மற்றும் ஹிரோடெக் இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு துணைத் தலைவர் செந்தில் குமார், மனித வள பொது மேலாளர் கவிதா மற்றும் மூத்த மேலாளர் வசந்த குமார், மேக்ஸ்பைட் டெக்னாலஜிஸ் சார்பில் சுரேந்திரன் தேவராஜ், தலைமை வணிக அதிகாரி வினோத், கிப்ட் செல்வின், தனசேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ