உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சட்ட உதவி மையம் திறப்பு

சட்ட உதவி மையம் திறப்பு

கோவை; முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சட்ட உதவி வழங்க, இலவச சட்ட உதவி மையம், கோவை கோர்ட் எதிரிலுள்ள முன்னாள் படை வீரர்கள் நல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மையத்தை, மாவட்ட நீதிபதி விஜயா நேற்று திறந்து வைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ரமேஷ், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் இப்ராகிம், வக்கீல்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி