பழநியில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம்
பழநி:பழநியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.பழநி திருஆவினன்குடி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.நாள்தோறும், பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது.நேற்று முன்தினம் வள்ளி, தெய்வானை முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவில் வெள்ளி தேரோட்டமும் நடைபெற்றது. பங்குனி உத்திர நாளான நேற்று, மதியம் 12:00 மணிக்கு சுவாமி, வள்ளி - தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார். மாலை 4:35 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. எம்.எல்.ஏ., செந்தில்குமார், கலெக்டர் சரவணன், எஸ்.பி., பிரதீப், பக்தர்கள் ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்தனர். மாலை 6:40 மணிக்கு தேர் நிலை சேர்ந்தது. ஏப்.,14 இரவு 11:00 மணிக்கு மேல் கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவடையும்.