சிறுமியருக்கு டார்ச்சர் சிறுவர்களுக்கு போக்சோ
பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியர் இருவரிடம், அதே பகுதியில் வசிக்கும் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட, 13 முதல், 16 வயதுடைய நான்கு சிறுவர்கள், தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.இது குறித்து, சிறுமியரின் பெற்றோர் புகாரின்படி, சைல்டு லைன் அமைப்பினர், மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், பாதிக்கப்பட்ட இரு சிறுமியிடம் விசாரணை நடத்தியதுடன், நான்கு சிறுவர்கள் மீது போக்சோ வழக்குப்பதிந்த, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.