ஐ.பி.ஏ.ஏ. இறகுப்பந்து போட்டியில் பி.எஸ்ஜி. பாலிடெக்னிக் முதலிடம்
கோவை; 'இன்டர் பாலிடெக்னிக் அத்லெடிக் அசோசியேஷன்' (ஐ.பி.ஏ.ஏ.,) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான ஆண்களுக்கான இறகுப்பந்து போட்டி, பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது. இயந்திரவியல் துறை தலைவர் மோகன் சிவகுமார், போட்டிகளை துவக்கி வைத்தார். இதில், 11 அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளுக்கு பின் நடந்த இறுதி போட்டியில், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் அணியும், கிருஷ்ணா பாலிடெக்னிக் அணியும் மோதின. 3-0 என்ற செட் கணக்கில் பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் வென்று முதல் பரிசை தட்டியது. கிருஷ்ணா பாலிடெக்னிக் இரண்டாமிடம் பிடித்தது. மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில், ராம கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரி அணியும், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா அணியும் மோதின. ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் அணி, 3-0 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாமிடம் பிடித்தது. நான்காமிடத்தை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை, பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கிரிராஜ் உள்ளிட்டோர் வழங்கினர்.