உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பராமரிப்பு பணிகளுக்காக ரயில்வே கேட் அடைப்பு

பராமரிப்பு பணிகளுக்காக ரயில்வே கேட் அடைப்பு

பொள்ளாச்சி; பராமரிப்பு பணிகளுக்காக, பொள்ளாச்சி - குஞ்சிபாளையம் ரயில்வே கேட் இன்று முதல், 29ம் தேதி வரை மூடப்படுகிறது.பொள்ளாச்சி -- மீனாட்சிபுரம் ரயில் பாதையில், குஞ்சிபாளையம் ரயில்வேகேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக, இன்று காலை, 9:30 மணி முதல் வரும், 29ம் தேதி காலை, 9:30 மணி வரை மூடப்படுகிறது.இதற்கு மாற்றாக, சிங்காநல்லுார் - சீனிவாசபுரம், அம்பராம்பாளையம் - சிங்காநல்லுார் வழித்தடத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம், என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை