உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோர்ட்டில் ஆஜர் ஆகாத ரவுடி சிறையில் அடைப்பு

கோர்ட்டில் ஆஜர் ஆகாத ரவுடி சிறையில் அடைப்பு

கோவை, ; கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த ரவுடி கவுதமை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 2014ம் ஆண்டு சரவணம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில், கொள்ளையடித்த வழக்கில் காமராஜபுரத்தை சேர்ந்த கவுதம் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, 2ம் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கவுதம் மீது, சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் 17 வழக்குகள், ரத்தினபுரி, பெரிநாயக்கன்பாளையம், கோபிசெட்டிபாளையம் ஆகிய ஸ்டேஷன்களில், தலா ஒரு வழக்கு என, 20 வழக்குகள் உள்ளன. கடந்த இரண்டு விசாரணைகளுக்கு, கவுதம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் அவரை கைது செய்ய, கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. காமராஜபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்த கவுதமை, சரவணம்பட்டி போலீசார் நேற்று காலை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை