உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சாய்பாபா கோயிலில் புத்தாண்டு வழிபாடு பக்தர்களுக்கு பூஜித்த 10 ரூபாய் வினியோகம்

 சாய்பாபா கோயிலில் புத்தாண்டு வழிபாடு பக்தர்களுக்கு பூஜித்த 10 ரூபாய் வினியோகம்

கோவை, சாய்பாபா கோயிலில்ஆங்கில புத்தாண்டை ஓட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், தங்கத்தேர் இழுத்தல், திருவிளக்கு வழிபாடு உள்ளிட்டவை நடந்தது. கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபாகோயில் என்றழைக்கும் நாகசாயி மந்திர் அமைந்துள்ளது. நாகசாயி அறக்கட்டளையால் இயக்கப்படுகிறது. ஆங்கில புத்தாண்டை ஒட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது. காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 5:15 க்கு ஹாரத்தியும், 6 மணிக்கு துனிபூஜை. 6:30 க்கு சாய்ஹோமம், 7:45 க்கு அபிஷேகம், 11 மணிக்கு நாமசங்கீர்த்தன சாய் பஜனை, 12 மணிக்கு மங்கலஹாரத்தி, 12:30 க்கு மதிய ஹாரத்தி நடந்தது. மாலை 4 மணிக்கு கோயில் திறக்கப்பட்டது. 6:15 க்கு சிறப்பு ஹாரத்தியும், 6:45 க்கு நாமசங்கீர்த்தன சாய் பஜனையும், 7:30 க்கு திருவிளக்கு வழிபாடும், 8 மணிக்கு தங்கத்தேர் வலம் வருதலும், 8:30 க்கு மஹாமங்கல ஹாரத்தியும் நடந்தது. நேற்று வழிபாட்டுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பாபாவுக்கு வைத்து பூஜித்த சிறப்பு பிரசாதங்களும், 10 ரூபாய் நோட்டுக்களும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை