காமாட்சி அம்பாள் கோயிலில் சாம்பவி பஜனை குழு இசை
கோவை; சாம்பவி பஜனை குழுவினரின் கர்நாடக இசை நிகழ்ச்சி. ஆர்.எஸ்.புரம் மேற்கு திருவேங்கடசாமி சாலையில் உள்ள காமாட்சி அம்பாள் கோயிலில், நேற்று நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில், சாம்பவி பஜனை குழுவினரின் ஆன்ம நேய இசை நிகழ்ச்சி, காமாட்சி அம்பாள் கோயிலில் நடக்கும். வழக்கமான உற்சாகத்துடன் நேற்று மாலை 6:30 மணிக்கு 'கஜமுக கஜமுக கனநாதா...' என்று துவங்கும் பாடலுடன், நிகழ்ச்சி துவங்கியது, திரளானோர் இசையை கேட்டு ரசித்தனர். அகில இந்திய பிராமணர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.