மேலும் செய்திகள்
நவராத்திரி விழா; கோவில்களில் கொலு வழிபாடு
04-Oct-2024
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடினர். கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, கடந்த ஒரு வார காலமாக கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இன்னிசை, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனால், கடந்த ஒரு வார காலமாக கோவில்கள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.நேற்று, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டுவீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளை சுத்தம் செய்து, மஞ்சள், சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, பூமாலை அணிவித்து வழிபாடு செய்தனர்.பள்ளி மாணவர்களது பாட புத்தகங்கள், சுவாமி அறையில் வைத்து பூஜை செய்து, சுண்டல் உள்ளிட்டவை படையலிட்டு வழிபட்டனர். கோவில்களில், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி, கோவில்களில் சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு நடந்தது.கோவில்கள் மற்றும் பள்ளிகளில் இன்று விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் நிகழ்ச்சியோடு மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் தேவியருடன் எழுந்தருளி அருள்பாலித்தார்.வால்பாறை வாழைத்தோட்டம் எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவிலிலில் நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது.* உடுமலை, குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவில் மற்றும் பூமிலட்சுமி அம்மன் கோவிலில் நவராத்திரியையொட்டி, ஒன்பது நாளும் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.குழந்தைகளுக்கு நவராத்திரி நாட்களில் பார்வதி, லட்சுமி, சரஸ்வதியாக அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. நேற்று சரஸ்வதிபூஜையையொட்டி, ஆண்டாள் நாச்சியார் சுவாமிக்கு சரஸ்வதி அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். - நிருபர் குழு -
04-Oct-2024