வாசகர்கள் கருத்துகள் ( 3 )
கோவை மாநகர கமிஷனர் அவர்களுக்கும் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கும் கோவை மாவட்ட போக்குவரத்து இணை கமிஷனர் அவர்களுக்கும் பணிவான வேண்டுகோள்.... அவிநாசி சாலையை சத்தி சாலை மற்றும் மேட்டுப்பாளையம் சாலையுடன் இணைக்கும் மூன்று வழித்தடங்களிலும் தயவுசெய்து நீங்கள் ஒரு முறை பயணித்து பார்த்தால் காளபட்டி சந்திப்பு, விளாங்குறிச்சி முதல் கரட்டுமேடு வரை உள்ள சாலை, சரவணம்பட்டி சந்திப்பு, அத்திப்பாளையம் ரோடு - துடியலூர் ரோடுடன் சந்திக்கும் சந்திப்பு ஆகிய நான்கும் காலத்திற்கு ஏற்ப இல்லை என எளிதில் அறிந்து கொள்ளலாம்.... இதை சரி செய்வது ....எளிதாக சிறு சாலை பழுது பார்த்தல், ஆங்காங்கே நோ பார்க்கிங் வைப்பதும் மட்டுமே மிகப்பெரிய முன்னேற்றத்தை அளிக்கும் என்பதை தாங்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம்.
இந்த சந்திப்பில் வாகன நெரிசலை குறைப்பதற்கு உள்ள வாய்ப்பை காவல்துறை பயன்படுத்தவில்லை ஏனென்றால் சரவணம்பட்டியில் இருந்து சத்தியமங்கலம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் செல்லக்கூடிய வாகனங்கள் நேராக கரட்டு மேட்டுக்கு செல்லும் வழி குண்டும் குழியுமாக வழி ஓரங்களில் புதர்கள் மண்டி இருக்கும் காரணத்தினால் அவ்வழியில் சத்தி சாலை சென்றடைய நேரம் அதிகம் ஆகின்றது.. அத்தோடு பாதுகாப்பு குறைபாடும் உள்ளது... எனவே அனைவரும் சரவணம்பட்டி வந்து செல்கின்றனர்.....கோவை மாநகராட்சியும் போக்குவரத்து போலீசாரும் இணைந்து இந்த பிரச்சினையையும் காளபட்டி ரவுண்டானா பிரச்சினையையும் தீர்த்தால் சரவணம்பட்டிக்கு வரும் வாகனங்கள் குறைந்து விடும்
மக்களின் மீது கொண்டுள்ள அக்கறையால் இப் பிரச்சனையை மீண்டும் கையில் எடுத்து முக்கியத்துவம் கொடுத்துள்ள தினமலருக்கு நன்றிகள் பத்திரிக்கை நெரிசலை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று கொடுத்துள்ள பட்டியலுடன் கீழ் கண்டவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்: சரவணம்பட்டி துடியலூர் சந்திப்பில் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளதால் பச்சை விளக்கு எரியும் நேரத்தில் செல்லக்கூடிய வாகனங்கள் பாதி எண்ணிக்கையில் தான் பயணிக்க முடிகிறது.... இந்த இடத்தில் சாலை மிகவும் மோசமாக பராமரிக்கப்படுவது இன்று நேற்று அல்ல சுமார் பத்து வருடங்களாக இதே நிலைமையில் தான் இருக்கிறது.. துடியலூர் சாலை பிரிவிலிருந்து சுமார் 159 அடி தூரத்தில் கீரணத்தம் சாலை பிரியும் இடத்தில் சாலை மருங்கிலும் நிறுத்தப்படும் வாகனங்களாலும் உச்சகட்ட வாகனங்கள் செல்லும் நேரத்தில் அந்த இடத்தில் காவல்துறை அதிகாரிகள் இல்லாததாலும் இந்த மொத்த இடமும் வாகன நெரிசலில் திணறுகிறது