உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு

சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு

கோவை: கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக, சிறுவாணி அணை உள்ளது. கடந்த சில நாட்களாக நகரில் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும், நல்ல மழை பெய்துவருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்துவருவதால், அதனையொட்டிய நீர் வழித்தடங்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி, சிறுவாணி அணைப்பகுதியில், 10 மி.மீ., மழையும், அடிவாரத்தில், 24 மி.மீ., மழையும் பதிவாகியிருந்தது. அணையின் நீர்த்தேக்க உயரம், 50 அடி. நேற்று, 36.24 அடியாக இருந்தது. குடிநீர் தேவைக்காக, 9.6 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை