உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முருகர் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம் விழா

முருகர் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம் விழா

மேட்டுப்பாளையம்: சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும், சிறுமுகை பழத்தோட்டம் பாலசுப்பிரமணியர் சுவாமி கோவிலில் இன்று, ( 27ம் தேதி) சூரசம்ஹாரம் விழா நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் கரையோரம், மிகவும் பழமையான சுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டதாகும். ஒவ்வொரு ஆண்டும் சூரசம்ஹாரம், திருக்கல்யாண வைபவ விழாவும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கடந்த, 22ம் தேதி காலை, கந்த சஷ்டி ஆரம்பமும் மற்றும் சுவாமிக்கு காப்பு கட்டுதலும், அபிஷேக, அலங்கார பூஜையும் நடந்தது. 26ம் தேதி வரை தினமும் சுவாமிக்கு அபிஷேக, அலங் கார பூஜை நடைபெற்றது. இன்று (27ம் தேதி) மாலை, 6:00 மணிக்கு சக்திவேல் வாங்குதலும், அதைத் தொடர்ந்து கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. 28ம் தேதி காலை, 10:30 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. பின்பு பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். சிறுமுகை பழத்தோட்டம் பாலசுப்பிரமணியர் சுவாமி கோவிலில், கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹாரம் விழா கடந்த, 22ம் தேதி கணபதி வேள்வி பூஜையுடன் துவங்கியது. 26ம் தேதி வரை அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. இன்று காலை மூலவருக்கு பால் அபிஷேகம் செய்த பின், 11:00 மணிக்கு வீரபாகு தூது செல்லுதலும், அலங்கார பூஜையும் நடைபெற உள்ளது. மாலை, 5:30 மணிக்கு சிறுமுகை பெரியூர் முத்துமாரியம்மன் கோவிலில் முருகப்பெருமான் சக்திவேல் வாங்குதல் வைபவம் நடைபெற உள்ளது. மாலை, 6:30 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. 28ம் தேதி காலை, 9:00 மணிக்கு சீர் வரிசை கொண்டு வருதலும், தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. மதியம் விருந்து நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் சிவசங்கரி, விழாக் கமிட்டியினர், கிருத்திகை வழிபாட்டுக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி