இதய நலம் காக்க கே.எம்.சி.எச்.ல் சிறப்பு பரிசோதனை முகாம்
அ விநாசி ரோட்டில் உள்ள, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் நடக்கும், சிறப்பு இதய பரிசோதனை முகாமில் பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகளுக்கு, கட்டணத்தில் சலுகை வழங்கப்படும், என, மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். கே.எம்.சி.எச்., நிர்வாகத்தினர் கூறியதாவது: மாரடைப்பு என்பது, இதய பாதிப்பு, ரத்தக்குழாய் அடைப்பால் ஏற்படுவதாகும். சர்க்கரை பாதிப்பு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு, உடல் பருமன், புகை பிடித்தல், உடற்பயிற்சி இல்லாதது, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் இதய பாதிப்புடன், மாரடைப்பும் ஏற்படுகிறது. நாற்பது வயதுக்கு மேல் மாரடைப்பு வருவது பொதுவாக உள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவு, ஈ.சி.ஜி., கொழுப்பு, உப்பு, ரத்த அழுத்தம், டி.எம்.டி., அல்லது எக்கோ பரிசோதனைகளை செய்துகொள்வது அவசியம். இதன் முடிவில், இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை பெற்று, மாரடைப்பை தடுக்கலாம், மேலும், இதய அடைப்பை உறுதி செய்ய ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அடைப்பு இருந்தால், ஆஞ்சியோ பிளாஸ்டி மற்றும் பைபாஸ் அறுவை சிகிச்சை வாயிலாக அடைப்புகளை நீக்கி இதய நலத்தை பாதுகாக்கலாம். அவிநாசி ரோட்டில் உள்ள, கே.எம்.சி.ஹெச்.,ல் சிறப்பு இதய பரிசோதனை முகாம், கடந்த 4ம் தேதி துவங்கியது; வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. தினமும் காலை, 7:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் முகாமில், சர்க்கரை பாதிப்பு பரிசோதனை, கொழுப்பு சத்தின் அளவு, கிரியேட்டின், ஈ.சி.ஜி., எக்கோஅல்லது டி.எம்.டி., பரிசோதனைகளை ரூ.1,750 கட்டணம் செலுத்தி மேற்கொள்ளலாம்; மருத்துவரின் ஆலோசனையையும் பெறலாம். இதில் மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளுக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, 74188 87411 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.