ஊட்டிக்கு சிறப்பு மலைரயில் இயக்கம்
மேட்டுப்பாளையம்: கோடைகால சீசனை முன்னிட்டு, ரயில்வே நிர்வாகம் ஊட்டிக்கு சிறப்பு ரயிலை, நேற்று முதல் இயக்கி உள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி மலை ரயில் இயக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனுக்கு தென்னக ரயில்வே நிர்வாகம், ஊட்டிக்கு சிறப்பு ரயிலை இயக்கி வருகிறது. இந்த ஆண்டு கோடை சீசனுக்கு, மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கு சிறப்பு மலை ரயிலை, ரயில்வே நிர்வாகம் நேற்று இயக்கியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g98orgv9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும், காலை, 9:10 மணிக்கு, மலை ரயில் ஊட்டிக்கு இயக்கப்படும்.அதேபோன்று ஊட்டியில் இருந்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையும், திங்கட்கிழமையும் காலை, 11:25 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு மாலையில் வந்து சேரும். இந்த சிறப்பு மலைரயில் மார்ச் 28ம் தேதி முதல், ஜூலை 6ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. நேற்று காலை, 9:10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, ஊட்டிக்கு சிறப்பு மலைரயில் இயக்கப்பட்டது. இதில் கோவையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவ, மாணவியர் உள்பட, 180 க்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.