உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரும் 15ம் தேதி காசி தமிழ் சங்கமம் கோவை - பனாரஸ் இடையே சிறப்பு ரயில்

வரும் 15ம் தேதி காசி தமிழ் சங்கமம் கோவை - பனாரஸ் இடையே சிறப்பு ரயில்

கோவை: காசி தமிழ் சங்கமத்தை முன்னிட்டு, கோவை - பனாரஸ் இடையே, சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாம் பதிப்பு வரும், 15ம் தேதி துவங்குகிறது. உத்திரபிரதேசத்தின் வாரணாசியில், 10 நாட்கள் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு கோவை - பனாரஸ் இடையே சிறப்பு ரயிலை இயக்குவதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி, கோவை - பனாரஸ்(06187) சிறப்பு ரயில், கோவையிலிருந்து வரும், 16 ம் தேதி காலை 6:35 மணிக்கு புறப்பட்டு, 18 ம் தேதி காலை 7:15 மணிக்கு பனாரஸ் சென்றடையும். அதேபோல், பனாரஸ் - கோவை(06188) சிறப்பு ரயில் பனாரஸில் இருந்து 22 ம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு புறப்பட்டு, 24ம் தேதி காலை 9:30 மணிக்கு கோவை வந்தடையும்.ஏ.சி., மூன்றடுக்கு, மூன்றடுக்கு(எகானமி), படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர், நெல்லுார், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல் உள்ளிட்ட பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில் நின்று செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி