ஸ்ரீ ரங்கம்மாள் மாணவர்கள் விழிப்புணர்வு பிரசாரம்
கோவை, ;ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையம் சார்பில், போதைக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அவிநாசி ரோட்டில் நடந்த பேரணியில், 450 மாணவர்கள் மற்றும் 25 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.