உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில அளவிலான தடகளம்; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

மாநில அளவிலான தடகளம்; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கோவை; மாநில அளவிலான தடகள போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் கோவை மாவட்ட தடகள சங்கம் சார்பில், எஸ்.எஸ்.வி.எம்., முதல் ஓப்பன் மாநில தடகள போட்டிகள், கடந்த இரு தினங்கள் நேரு விளையாட்டு அரங்கில் நடந்தன.இப்போட்டியில், 16, 18 மாணவர்கள், ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். அனைத்து வயது பிரிவு களிலும் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு, வட்டு எறிதல் போட்டிகள் நடந்தன. இதில் தமிழகத்தின் பல்வேறு தடகள கிளப்புகள், மாவட்ட தடகள சங்கத்தினர் பங்கேற்றனர். வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் சான்றிதழ் வழங்கப்பட்டன. போட்டிகளின் துவக்க விழா கடந்த, 7ம் தேதி நடந்தது. கோவை எம்.பி., ராஜ்குமார் துவக்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு, எஸ்.பி., கார்த்திகேயன் பரிசு வழங்கினார். தமிழ்நாடு தடகள செயலாளர் லதா தலைமை வகித்தார். எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி நிர்வாகிகள் மோகன்தாஸ், மணிமேகலை, கோவை மாவட்ட தடகள சங்க தலைவர் லீமாரோஸ், செயலாளர் சம்சுதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ