உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாகம்மன் கோவிலில் வரும் 5ல் ஆண்டு விழா

நாகம்மன் கோவிலில் வரும் 5ல் ஆண்டு விழா

நெகமம்; நெகமம், செட்டியக்காபாளையம் நாகம்மன் கோவிலில் வரும் 5ம் தேதி ஆண்டு விழா நடக்கிறது. நெகமம், செட்டியக்காபாளையம் விநாயகர், நாகம்மன், கன்னிமார் கருப்பராயன் கோவிலில், 10ம் ஆண்டு விழா நிகழ்ச்சி, வரும் 4ம் தேதி துவங்குகிறது. இதில், மாலை 4:00 மணிக்கு சுவாமிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்வு நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு காப்பு கட்டுதல், இரவு 7:00 மணிக்கு விநாயகர் பூஜை மற்றும் அம்மனுக்கு மாங்கல்யம் அணிவித்தல், விசேஷ பூஜைகள் நடக்கிறது. வரும், 5ம் தேதி, காலை 5:00 மணிக்கு, கணபதி ஹோமம், கலசம் முத்தரித்தல், கோவிலை சுற்றி வலம் வருதலுக்கு பின், காலை 6:00 மணிக்கு, அம்மனுக்கு மகா தீர்த்த அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ