இன்றும், நாளையும் குடிநீர் சப்ளை கட்
அன்னுார்: அன்னுார் பேரூராட்சியில், இன்றும், நாளையும், குடிநீர் வினியோகம் இருக்காது. குந்தா அணையில் சேறு சகதி அகற்றும் பணியும், நீரேற்று நிலையங்களில் தூய்மைப்படுத்தும் பணியும் நடப்பதால், இன்று (11ம் தேதி) நாளை (12ம் தேதி) ஆகிய இரண்டு நாட்களும் அன்னூர் பேரூராட்சியில் குடிநீர் வினியோகம் இருக்காது. மக்கள் உரிய மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும் என, பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.