உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பரவலாக பெய்யும் மழை; அணைகளுக்கு நீர்வரத்து

பரவலாக பெய்யும் மழை; அணைகளுக்கு நீர்வரத்து

வால்பாறை; வால்பாறையில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்ததால், பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில் உள்ள சோலையாறு, காடம்பாறை, மேல்ஆழியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பின.இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்கிறது. நேற்று முன்தினம் வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதியில் பெய்த கனமழையால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு மி.மீ.,): சோலையாறு அணை - 40, வால்பாறை - 37, பரம்பிக்குளம் - 27, ஆழியாறு - 3, மேல்நீராறு - 58, கீழ்நீராறு - 41, காடம்பாறை - 6, மேல்ஆழியாறு - 2, சர்க்கார்பதி - 20, துாணக்கடவு - 16, பெருவாரிப்பள்ளம் - 22, நவமலை - 2, பொள்ளாச்சி - 3 என்ற அளவில் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ