உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்டுப்பன்றிகள் அட்டகாசம் ;போகம்பட்டி விவசாயிகள் அவதி

காட்டுப்பன்றிகள் அட்டகாசம் ;போகம்பட்டி விவசாயிகள் அவதி

சூலுார்; ''மக்காச்சோள பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும்,'' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சுல்தான்பேட்டை பகுதியில், மக்காச்சோளம் பீட்ரூட், கீரை வகைகள் அதிகம் சாகுபடியாகிறது. இந்நிலையில், காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.இதுகுறித்து போகம்பட்டி விவசாயிகள் கூறியதாவது: சுற்றுவட்டார பகுதிகளில், பீட்ரூட், மக்காச்சோளம், கீரைகள் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதமாக கூட்டமாக வரும் காட்டு பன்றிகள், மக்காச்சோள கதிர்களை உண்டு நாசம் செய்கின்றன. விளை நிலத்தில் கூட்டமாக வருவதால், பீட்ரூட் மற்றும் கீரை செடிகளும் நாசமாகி விடுகின்றன. பலமுறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. சேதம் ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகளை உடனடியாக பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை