உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகர்ப்புற நல்வாழ்வு மையங்களில் வேலை

நகர்ப்புற நல்வாழ்வு மையங்களில் வேலை

கோவை: தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், கோவையில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள, மருத்துவம் சார்ந்த பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மருத்துவமனை பணியாளர்கள் 26 பேர், பல் மருத்துவ உதவியாளர் 2 பேர், பல் மருத்துவ பிரிவு டெக்னீசியன் ஒருவர், இயன்முறை மருத்துவ நிபுணர் ஒரு இடத்திற்கும், தற்காலிக பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். மருத்துவ பணியாளர்கள் பிரிவுக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்; எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.பல் மருத்துவ உதவியாளர் பணிக்கு, 35 வயதுக்கு கீழ் இருப்பதுடன், பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் அவசியம்.பல் டெக்னீசியன் பணிக்கு, 20 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்; சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளோமா முடித்து இருப்பதுடன், இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். முழுமையான விபரங்களை, கோவை பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க, வரும் 13ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ