உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இளம்பெண் படம் மார்பிங் ஜிம் பயிற்சியாளருக்கு கம்பி

இளம்பெண் படம் மார்பிங் ஜிம் பயிற்சியாளருக்கு கம்பி

கோவை:இளம்பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து, ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஜிம் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார். கோவை, வடவள்ளி, தில்லை நகரில் சஞ்சய், 29, உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். உடற்பயிற்சிக்கு வந்த இளம்பெண்ணுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. அந்த பெண்ணிடம் சஞ்சய் தவறான முறையில் பழக ஆரம்பித்துள்ளார். பெண்ணுக்கு பிடிக்காததால், ஜிம்முக்கு செல்வதை நிறுத்திக் கொண்டார். அதன் பின், தொடர்புகொண்டு பேச முயற்சித்தும், அந்த பெண் கண்டுகொள்ளவில்லை. கோபமடைந்த சஞ்சய், அந்த பெண் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு ஏற்படுத்தி, புகைப்படங்களை வெளியிட்டார். அந்த பெண் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிந்து, சஞ்சயை கைது செய்தனர். இன்ஸ்டாவில் வெளியிடப்பட்ட பெண்ணின் ஆபாச மார்பிங் போட்டோவை நீக்க, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை