மேலும் செய்திகள்
பைக் மீது கார் மோதல் புதுச்சேரி முதியவர் பலி
28-Aug-2024
சிதம்பரம்: சிதம்பரத்தில் பெட்டி கடைக்காரரிடம் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் வாகிச நகரை சேர்ந்தவர் சர்புதீன், 62; இவர் அதே பகுதியில் பெட்டிக் கடை வைத்துள்ளார்.சிதம்பரம் கோவிந்தசாமி நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ராகுல், 28; கந்தமங்கலம் செல்லதுரை மகன் மூவேந்தன், 22; பழைய புவனகிரி சுரேந்தர் மகன் கவுசிலன், 23; மீதிகுடி பாக்கியராஜ் மகன் தேவராஜ், 17; இவர்கள் 4 பேரும், நேற்று முன்தினம் மாலை சர்புதீன் கடை முன் நின்று கொண்டு, கையில் கத்தியுடன், ஆபாசமாக பேசினர்.தட்டிக்கேட்ட சர்புதீனை கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து சர்புதீன் அளித்த புகாரின் பேரில், ராகுல், கவுசிலன், மூவேந்தன், தேவராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிந்து ராகுல், கவுசிலன் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய முவேந்தன், தேவராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.கத்தியை காட்டி மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை தொடர்ந்து போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
28-Aug-2024