மேலும் செய்திகள்
நந்தனார் அரசு பள்ளியில் திருக்குறள் கருத்தரங்கம்
30-Aug-2024
கடலுார்: கடலுார் மாவட்ட உலக திருக்குறள் பேரவை சார்பில், அண்ணாமலை நகர் ராணி சீதை ஆட்சி மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் விழா மற்றும் சமுதாய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி துணை தலைமை ஆசிரியர் முருகவேல் தலைமை தாங்கினார். ஆசிரியர் விநாயகம் வரவேற்றார். உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். செயலாளர் நடராஜன் வாழ்த்துரை வழங்கினார். ஆரியர்கள் தேவ கிருபை, பேபி சவீதா, அரிகிருஷ்ணன், முருகையன், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை சவீதா நன்றி கூறினார்.
30-Aug-2024