ரவுண்டானாவில் ைஹமாஸ் விளக்கு அமைக்க கோரிக்கை
பெண்ணாடம்: 'பெ.பொன்னேரி ரயில்வே மேம்பால ரவுண்டானாவில் ைஹமாஸ் விளக்கு அமைக்க வேண்டும்' என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பெ.பொன்னேரி ரயில்வே கேட் (எண்.181) ரயில்கள் வரும் போது மூடுவதால் போக்குவரத்து பாதித்தது. இதையடுத்து கடந்த 2010ம் ஆண்டில் 23 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு, போக்குவரத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.விருத்தாசலம் - திட்டக்குடி மார்க்கத்தில் ரயில்வே மேம்பாலம் வழியாகச் செல்லும் வாகனங்கள் மற்றும் அரியலுார் மாவட்டத்தில் உள்ள சிமென்ட் ஆலைகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் பாலத்தின் முகப்பு பகுதியில் வளைந்து செல்ல இடவசதியின்றி, எதிரே வரும் வாகனங்களுடன் மோதி விபத்துகள் ஏற்படுவதுடன் உயிரிழப்புகளும் ஏற்பட்டது.விபத்துகளைத் தடுக்க பெ.பொன்னேரி மேம்பால முகப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ரவுண்டானா கட்டப்பட்டது. ஆனால் ைஹமாஸ் விளக்கு வசதி இல்லாததால் அப்பகுதி இருளில் மூழ்கி, வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கிறது. இப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.எனவே, பெ.பொன்னேரி மேம்பாலம் முகப்பு ரவுண்டானாவில் ைஹமாஸ் விளக்கு அமைத்து, விபத்து மற்றும் உயிரிழப்பைத் தடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..