வேளாங்கண்ணி பக்தர்களுக்கு உதவி
கடலுார்: வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் தண்ணீர் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது.வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா வரும் 29ம் தேதி நடக்கிறது. அதையொட்டி பல்வேறு பகுதியில் இருந்து மாதா கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். தொலை துாரங்களில் இருந்து வரும் இவர்களுக்கு கடலுார் சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் பக்கிரான், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட்டுகள் வழங்கினார்.