உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மன்னம்பாடி பள்ளியில் இலக்கிய மன்ற துவக்கம்

மன்னம்பாடி பள்ளியில் இலக்கிய மன்ற துவக்கம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த மன்னம்பாடி அரசு உயர்நிலை பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது.விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார்.ஆசிரியர் ரத்தின புகழேந்தி வரவேற்றார்.கவிஞர் பல்லவிகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தமிழ் இலக்கியம், மாணவர்களின் ஆளுமை குறித்து பேசினார். அப்போது, மாணவர்களிடம் கேள்வி கேட்டு சிறப்பாக பதில் அளித்த மாணவர்களுக்கு தனது நுால்களை பரிசளித்தார்.இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆசிரியர் தனேந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை