உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக்கில் மணல் கடத்தியவர் கைது

பைக்கில் மணல் கடத்தியவர் கைது

விருத்தாசலம்: மணிமுக்தாற்றில் இருந்து சாக்கு மூட்டையில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, பூதாமூர் மணிமுக்தாற்றில் இருந்து சாக்குமூட்டையில் மணலை கட்டி, பைக்கில் எடுத்துச் செல்ல முயன்றவரை பிடித்து விசாரித்தனர்.அதில் அவர், அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த அகரம் செல்வராஜ் மகன் சுரேஷ், 36; என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து பேஷன் ப்ரோ பைக், மூன்று மணல் மூட்டைகள் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !