கடலுாரில் வரும் 21ம் தேதி அஞ்சலக குறைதீர் கூட்டம்
கடலுார்: கடலுார் அஞ்சல் கோட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம், வரும் 21ம் தேதி நடக்கிறது.கடலுார் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் செய்திக்குறிப்பு;தபால் சேவை குறித்த பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் வரும் 21ம் தேதி மதியம் 12:00 மணிக்கு கடலுார் கடற்கரை சாலை, வண்ணாரப்பாளையத்தில் உள்ள அஞ்சலகங்களின் கோட்டகண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்தில் கடலுார் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலக சேவைகளில் வாடிக்கையாளர்களின் பிரச்னைகள், புகார்கள் மற்றும் குறைகள் போன்றவை விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படும். தபால் சேவை குறித்த புகார்கள் மற்றும் குறைகள் இருந்தால் அஞ்சகலங்களின் கண்காணிப்பாளர், கடலுார் கோட்டம், கடலுார் 607 001 என்ற முகவரிக்கு வரும் 19ம் தேதிக்கு முன்பாக கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.