உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிப்பாடு

பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிப்பாடு

கடலுார், : கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, காலை பெரியநாயகி அம்மன் சமேத பாடலீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் சிறப்பு தீபாராதனை நடந்தது.மாலை நந்தி பகவானுக்கு பால், தயிர், நெய், தேன், மஞ்சள், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 23 வகையான மங்கள திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. நந்தி பகவான் மலர்கள், வில்வ மாலை மற்றும் அருகம்புல் மாலை சாற்றி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நந்தி பகவானுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை