மாநகராட்சி கவுன்சிலர் நலத்திட்ட உதவி வழங்கல்
கடலுார்: வேளாண் துறை அமைச்சரும், கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளருமான பன்னீர்செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் துப்புறவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.கடலுார் செம்மண்டலம் 3வது வார்டில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி கவுன்சிலரும், கடலுார் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்க தலைவருமான பிரகாஷ், பொதுமக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.நிர்வாகிகள் ராமலிங்கம், விஜயகுமார், முருகன், பாஸ்கர், அஷ்ரப் அலி, சதீஷ், மணிவண்ணன், விஷ்ணு, விஜி ஆனந்த், செல்வராஜ், சம்பந்தம், சிலம்பு உட்பட பலர் கலந்து கொண்டனர்.