உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டாஸ்மாக் மது விற்றவர் கைது

டாஸ்மாக் மது விற்றவர் கைது

நெல்லிக்குப்பம்: பண்ருட்டி அடுத்த காட்டுகூடலூரில் டாஸ்மாக் மதுபான கடை அருகே, பங்க் கடையில் மதுபானங்கள் விற்பதாக பண்ருட்டி கலால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது டாஸ்மாக் அருகே உள்ள பெட்டிக்கடையில் மொத்தமாக டாஸ்மாக் மதுபானங்கள் வாங்கி வந்து விற்றது தெரியவந்தது.இதுகுறித்து வழக்கு பதிந்து, பார் நடத்திவந்த காட்டுகூடலுாரை சேர்ந்த ராஜேந்திரன், 56: என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !