உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணிடம் செயின் பறிக்க முயன்றவர் கைது 

பெண்ணிடம் செயின் பறிக்க முயன்றவர் கைது 

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே பெண்ணிடம் தாலி செயின் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அடுத்த கலர்குப்பம்,தெற்கு தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மனைவி பிரியா, 21. இவர் நேற்று முன்தினம் வயலில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த இலுப்பையூர் காலனியைச் சேர்ந்த தேவா, 18, என்பவர், பிரியா கழுத்தில் இருந்த தாலி செயினை பறிக்க முயன்றார். அப்போது, பிரியா கூச்சலிட்டதும் தேவா அங்கிருந்து தப்பியோடினார்.இதுகுறித்த புகாரின் பேரில் ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, தேவாவை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !