மேலும் செய்திகள்
நடிகர் ரஜினி கருத்துக்கு மக்கள் கருத்து
27-Aug-2024
பெண்ணாடம் : கோவிலுார் ஊராட்சியில் பராமரிப்பின்றி பாழாகி வரும் விளையாட்டுத் திடலை சீரமைக்க வேண்டும் என இளைஞர்கள், மாணவர்கள் புலம்பி வருகின்றனர்.நல்லுார் ஒன்றியம், பெண்ணாடம் அடுத்த கோவிலுார் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கிராம இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்த, அதே பகுதியில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன், 5 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டது.அதில், வாலிபால், கூடைப்பந்து விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட்டிருந்தன. போதிய பராமரிப்பின்றி நாளடைவில் உபகரணங்கள் பாழாகி வருவதுடன், மீதமுள்ள உபகரணங்களை சமூக விரோதிகள் பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் விளையாட்டுத் திடல் பயன்பாடின்றி உள்ளதால் கிராம இளைஞர்கள், மாணவர்கள் மாலை நேரங்களில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, கோவிலுாரில் பாழாகி வரும் விளையாட்டு திடலை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம இளைஞர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27-Aug-2024