உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் முதல்வர் விழாவிற்கு அமைத்த சாலையை காணோம்

கடலுாரில் முதல்வர் விழாவிற்கு அமைத்த சாலையை காணோம்

கடலுார் கடலுாரில் முதல்வர் விழாவிற்காக அமைக்கப்பட்ட சாலையை இரவோடு இரவாக இயந்திரம் மூலம் சுரண்டி அள்ளி சென்றனர்.முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் 21ம் தேதி கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த விழாவில் பங்கேற்று, புதிய திட்டங்களை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.முதல்வர் வருகையையொட்டி, பீச் ரோட்டில் இருந்து பாபு கலையரங்கம் வழியாக விழா மேடை வரை எம்.சாண்ட் கலவை, ஜல்லி கொட்டப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. இச்சாலை வழியாக பொதுமக்கள், கட்சியினர் விழா அரங்கிற்கு வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு மேல், மர்ம நபர்கள் ஜே.சி.பி., இயந்திரம் மூலமாக பாபு கலையரங்கம் அருகில் சாலையை சுரண்டி டிராக்டரில் அள்ளிச் சென்றனர். பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சாலையை சுரண்டி அள்ளிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை