உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் விற்ற பெண் கைது

மதுபாட்டில் விற்ற பெண் கைது

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு தலைமையிலான போலீசார் நேற்று குருவன்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த முத்து மனைவி பூங்கோதை, 54, என்பவர் தனது வீட்டில், கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து, ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, பூங்கோதையை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ