உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபர் மீது தாக்கு 2 பேர் கைது

வாலிபர் மீது தாக்கு 2 பேர் கைது

விருத்தாசலம்; வாலிபரை தாக்கி, மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம், சித்தலுாரை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் வீரமணி, 30. இவரது சகோதரியை அதே பகுதியைச் சேர்ந்த சேட்டு கிண்டல் செய்துள்ளார். இதை வீரமணி தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த சேட்டு நண்பர்கள் காந்தி நகரைச் சேர்ந்த கொளஞ்சி மகன் ஜெயபாண்டியதேவன், 20; ராமச்சந்திரன்பேட்டை அருளானந்தம் மகன் ஆகாஷ்,21; ஆகியோர் வீரமணியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயமடைந்த அவர், விருத்தாசலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, ஜெயபாண்டியதேவன், ஆகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !