உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது

டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற பெண்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று தொட்டிக்குப்பம், பள்ளிப்பட்டு கிராம பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராசாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோபால் மனைவி தனவள்ளி, 65; பள்ளிபட்டு புதுதெருவை சேர்ந்த ரவி மனைவி விஜயலட்சுமி, 48, ஆகியோர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்றது தெரியவந்தது. மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, தனவள்ளி, விஜயலட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ