உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் பதுக்கிய 3 பேர் கைது

மதுபாட்டில் பதுக்கிய 3 பேர் கைது

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே புதுச்சேரி மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் பதுக்கிய ஒரு பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். வானமாதேவி சக்திவேல், 49; சக்தி சிவக்குமார், 41;ஆகிய இருவரும் சக்திவேல் நிலத்தில் புதுச்சேரி மது பாட்டில்கள் 15 மற்றும் 1.5 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்தனர். இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து சாராயம் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மற்றொரு வழக்கு நடுவீரப்பட்டு போலீசார் ஒதியடிக்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 10 மது பாட்டில்கள் மற்றும் 2 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்த ஒதியடிக்குப்பம் மாணிக்கவள்ளி, 59; என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை