உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புத்தேரி பெருமாள் கோவிலில் 3வது சனி சிறப்பு வழிபாடு

புத்தேரி பெருமாள் கோவிலில் 3வது சனி சிறப்பு வழிபாடு

பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி 3வது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.கோவிலில், நேற்று காலை 10:00 மணியளவில், மக்கள் நலன் பெற வேண்டி சிறப்பு பூஜை, 10:30 மணியளவில், மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மூலவர் சுவாமி பழம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:00 மணியளவில் பிரகாரத்தில் உற்சவர் சுவாமிகள் வீதியுலா நடந்தது. வரும், 12ம் தேதி சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கிறது.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ச நேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வவிநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை