உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிராம சபைக் கூட்டத்தில் தண்ணீர் கேட்டு நுாதன போராட்டம்

கிராம சபைக் கூட்டத்தில் தண்ணீர் கேட்டு நுாதன போராட்டம்

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே இறுதிச் சடங்கு செய்ய தண்ணீர் கேட்டு கிராம மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் நுாதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருத்தாசலம் அடுத்த க.இளமங்கலம் காலனியில் 1000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு முன் கன்னியம்மன் கோவில் அருகே உள்ள மினிடேங்க்கில் இருந்த தண்ணீர் பிடித்து வந்து, இறுதிச் சடங்கு செய்யவது வழக்கம். கடந்த ஓராண்டிற்கு முன் இந்த மினிடேங்க் போர்வல் பழுதான நிலையில், அதனை இதுவரை சீரமைக்கவில்லை. இதனால், அருகில் உள்ள வீடுகளில் தண்ணீர் பிடித்து வந்து சடங்கு செய்யும் நிலை இருந்து வருகிறது. இதுகுறித்து, கிராம மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று அப்பகுதியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு, சடலத்திற்கு இறுதி சடங்கு செய்வது போல், காலி குடம், நெற்றியில் பட்டை, கழுத்தில் மாலை அணிந்து, பறை இசையுடன் ஊர்வலமாக வந்தனர். அப்போது, அவர்களிடம் ஒன்றிய அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், 2 நாட்களின் போர்வெல் மோட்டார் சீரமைத்து தருவதாக உறுதியளித்தனர். அதனையேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ