விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், மங்கலம்பேட்டை தீயணைப்பு துறை சார்பில், விபத்தில்லா தீபாவளி மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது மற்றும் வடகிழக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாணவர்களுக்கு செயல்முறை விளக்கமளித்து விழப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.