உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புத்தேரி கோவிலில் அன்னாபிஷேகம்

புத்தேரி கோவிலில் அன்னாபிஷேகம்

திட்டக்குடி: ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், சந்திர மவுலீஸ்வரருக்கு அன்னாபிேஷகம் வெகு விமர்சையாக நடந்தது.இதையொட்டி, நேற்று காலை 8:00 மணியளவில் மூலவர் வரதராஜ பெருமாள் தாயார் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம் நடந்தது.மாலை 5:30 மணிக்கு சந்திர மவுலீஸ்வரருக்கு அன்னம் சாற்றி சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இரவு 8:30 மணியளவில் அன்னம் அலங்காரம் களையப்பட்டு அர்த்தசாம பூஜை நடந்தது. தொடர்ந்து, சமபந்தி போஜனம் நடந்தது.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி