உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அண்ணாமலை நகர் பேரூராட்சி கூட்டம்

அண்ணாமலை நகர் பேரூராட்சி கூட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது. சேர்மன் பழனி தலைமை தாங்கினார். துணை சேர்மன் தமிழ்ச்செல்வி, செயல் அலுவலர் கோமதி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கவுன்சிலர்கள் தங்க அன்பரசு, வேலு, முருகையன், சபரிராஜன், விஜயலட்சுமி, தேவிகா, புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளில் சேதமடைந்த சாலைகளுக்கு பதிலாக புதிதாக சாலை அமைப்பது. செப்., 4 ம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடக்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !