உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மல்லர் கம்பம் போட்டியில் இரண்டு வெண்கலம்; அண்ணாமலை பல்கலைக்கழக அணி சாதனை

மல்லர் கம்பம் போட்டியில் இரண்டு வெண்கலம்; அண்ணாமலை பல்கலைக்கழக அணி சாதனை

சிதம்பரம் : அனைத்திந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடைேயயான மல்லர் கம்பம் போட்டியில் இரண்டு வெண்கல பதக்கங்களை பெற்று அண்ணாமலை பல்கலைக்கழக அணி சாதனை படைத்துள்ளது. அனைத்து இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 'மல்லர் கம்பம்' விளையாட்டுப் போட்டிகள் சென்னை விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் நடந்தது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்கலைக்கழக அணிகள் பங்கேற்று விளையாடின. இதில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மல்லர் கம்பம் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்று விளையாடியது. தனிநபர் போட்டிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் மற்றும் பாலாஜி ஆகிய இரு மாணவர்கள் வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். குழு போட்டிகளில் அண்ணாமலை பல்கலைகழக பெண்கள் அணி 4ம் இடத்தையும், ஆண்கள் அணி 6 ம் இடத்தையும் பெற்று நடப்பு ஆண்டிற்கான, கேலோ இந்தியா பல்கலைக்கழகங்கள் இடையான போட்டியில் பங்குகேற்க தேர்வு பெற்றுள்ளனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்வி துறை இயக்குனர் சிவக்குமார் மற்றும் வெற்றி பெற்ற பல்கலைக்கழக அணியினரை, துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப் பாளர் அறிவுடைநம்பி, பதிவாளர் பிரகாஷ் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அணியின் மேலாளர்கள் சரவணன், ஜோதிப்பிரியா, பயிற்சியாளர் ஆதி, பெண்கள் கன்வினர் பானுப்பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !