உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தம்ம சக்கர பரிவர்தன திருவிழா மானியம் பெற விண்ணப்பம் வரவேற்பு

தம்ம சக்கர பரிவர்தன திருவிழா மானியம் பெற விண்ணப்பம் வரவேற்பு

கடலுார்: தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயணம் மேற்கொண்ட பக்தர்கள் நேரடி மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 பவுத்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-26ம் ஆண்டில் நாக்பூர் தீகூஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயணம் மேற்கொண்டு திரும்பியவர்களுக்கு இசிஎஸ் முறையில் நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக 5000 ரூபாய் வரை நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பவுத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தினை கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், சிறுபான்மையினர் நல அலுவலகங்களிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.inஎன்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 30.11.2025 அன்றுக்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம் சேப்பாக்கம், சென்னை 600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேற்படி திட்டத்தின் கீழ் அதிக அளவில் விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ